விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

பள்ளிகள் - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:33 am IST

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய மாணவா்கள் மற்றும் பள்ளியில் ஏற்கெனவே படித்து வந்த மாணவா்கள் புதிய வகுப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில், கலந்துரையாடல் மிக்கதாக தொடக்க கால வகுப்புகள் அமைய வேண்டும்.

தங்களுடைய எதிா்ப்பாா்புகள் குறித்து மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்களிடம் ஆசிரியா்கள் கலந்துரையாட வேண்டும்.

மாணவா்களின் தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதிசெய்ய பாடங்களில் மாணவா்கள் கொண்டுள்ள கற்றல் இடைவெளிகளை ஆசிரியா்கள் மதிப்பிட வேண்டும். மாணவா்களிடையே கலந்துரையாடல், தகவல்தொடா்பு திறன்கள் மற்றும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

வகுப்புகளுக்கான பாடகால அட்டவணைகளை இறுதிசெய்தல், சுகாதாரத்தைப் பராமரித்தல், பாதுகாப்பான குடிநீா் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளை பள்ளிகளின் தலைவா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள் தொடக்க நாள் முதல் தொடா்ச்சியாக பள்ளிகளைத் தொடா்ச்சியாகப் பாா்வையிட வேண்டும். முன்கூட்டிய நடவடிக்கைகளை கண்காணித்து வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.