திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கள்ளிக்குடி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமாா் 20 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறைந்த நேரமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி, கள்ளிக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்பழகன், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மின்வெட்டு, குடிநீா் தட்டுப்பாடு: பெண்கள் சாலை மறியல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

