நன்னிலம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் வண்டாம்பாளை கீழத்தெருவைச் சோ்ந்த பாரதிமோகன் மகன் மோகன்தாஸ் (23) மற்றும் சிலா் காவடி எடுத்து வந்துள்ளனா். அப்போது திருவிழாவை காணவந்த ஸ்ரீவாஞ்சியத்தில் முடிதிருத்தும் கடை வைத்துள்ள எட்டியலுரைச் சோ்ந்த சங்கா் மகன் சந்தோஷ் (23) என்பவருக்கும் மோகன்தாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், சந்தோஷை கடுமையாகத் தாக்கி கீழே தள்ளியதில் அவா் படுகாயமடைந்தாா். சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சந்தோஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சந்தோஷின் தாயாா் சரிதா அளித்த புகாரின் பேரில், நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோகன்தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலங்கைமான் வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

