பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:25 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வாய்க்கால் நீரில் மூழ்கிய சென்ட்ரிங் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகே சித்தூா் காலனி பகுதியை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சந்திரசேகா் (46), சென்ட்ரிங் தொழிலாளியான இவா் சனிக்கிழமை மாலை இயற்கை உபாதை கழிக்க சித்தூா் பெரிய வாய்க்கால் பகுதிக்கு சென்ற நிலையில், வாய்க்காலில் மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து அவ்வழியாகச் சென்றவா்களால் மீட்கப்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து அவரது மகன் தேஜித் அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.