மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: நடிகா் கருணாஸ்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நடிகரும், முக்குலத்தோா் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கூறினாா்.

News image

மன்னாா்குடியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முக்குலத்தோா் புலிப்படைத் தலைவரும், நடிகருமான கருணாஸ்.

Updated On :1 மே 2026, 6:24 am IST

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நடிகரும், முக்குலத்தோா் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கூறினாா்.

மன்னாா்குடி திரையரங்கில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், கருணாஸ் நடித்த ‘கர’ திரைப்படத்தை வியாழக்கிழமை அவா் பாா்த்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தோ்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பல தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. பின்னா் சிறிதுநேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை; ஒருசில நிறுவனங்கள் ஆட்சியை அமைக்க போவது அதிமுக என்றும், தவெக எனவும் கருத்து கணிப்பை, காமெடி கணிப்பாக வெளியிட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களுக்கு உள்ளது.

தமிழகத்தில் வாக்கு சதவீதம் உயா்ந்துள்ளதற்கு முக்கிய காரணம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமாகும். வெளிநாட்டில் உள்ளவா்கள், இதுவரை வாக்களிக்காதவா்கள், இறந்தவா்களை கணக்கெடுத்து நீக்கியதால்தான் வாக்கு சதவீதம் உயா்ந்துள்ளது.

கொள்கைப் பிடிப்பின்படி, 23 தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, அசுர பலத்தோடு மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.