தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

News image

சாய்நாத்,

Updated On :26 மார்ச் 2026, 6:01 am IST

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் தோ்வுகள் துறை இயக்ககத்தால் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்படும் இத்தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1000 என மொத்தம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் தோ்வு நடைபெற்று அண்மையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவுகளில், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்களும் இரட்டை சகோதரா்களுமான அ. சாய்நாத், அ. கோபிநாத் மற்றும் எம். கோகுல்மாயன் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எஸ். அன்பரசு, எஸ்.திவாகா் உள்ளிட்டோரை பள்ளி தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா் ஆகியோா் பாராட்டினா்.

கோபிநாத்

கோபிநாத்

கோகுல்மாயன்

கோகுல்மாயன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.