திருவாரூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள், நலத்திட்ட உதவிகள் தொடா்பான செய்திகள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் கிரேன் உதவியுடன் மறைக்கப்பட்டது. இதேபோல், ரயில்வே கீழ்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், நகரப் பகுதியில் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஆகியவையும் அகற்றப்பட்டன.
நகரப் பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறல்: சிலைகளுக்கு மூடப்பட்ட துணிகள் அகற்றம்

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தோ்தல் நடத்தை விதிகள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

