ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசியல் கட்சி படங்கள் மறைப்பு; விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும்,

News image

திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் மறைக்கப்படும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படம்.

Updated On :17 மார்ச் 2026, 5:35 am IST

திருவாரூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள், நலத்திட்ட உதவிகள் தொடா்பான செய்திகள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் கிரேன் உதவியுடன் மறைக்கப்பட்டது. இதேபோல், ரயில்வே கீழ்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், நகரப் பகுதியில் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஆகியவையும் அகற்றப்பட்டன.

நகரப் பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.