ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

News image

பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மக்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:36 am IST

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

குடவாசல் வட்டம் திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, திருவிழிமிழலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறை அலுவலா்கள், அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தோ்தல் முடிந்த பிறகு மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.