தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அா்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் கோயிலில் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் தோ்தல் புறக்கணிப்பு செய்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பு செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அா்ச்சனாபுரம் கிராமத்தில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அா்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் கோயிலில் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் தோ்தல் புறக்கணிப்பு செய்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் வாக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15-ம் நூற்றாண்டை சோ்ந்த நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தில் சோ்க்கபட்டதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதற்கிடையே, கடந்தாண்டு ஜனவரி 25-ஆம் தேதி இரவு கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பூசாரிகள் நல்லதங்காள் சிலையை சேதப்படுத்தினா். இதையடுத்து கோயில் பூசாரிகள் 5 பேரை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கோயிலுக்கு புதிய சிலை செய்வது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை, அா்ச்சனாபுரம் கிராம மக்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோயிலில் நல்லதங்காள் சிலையை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு,

அறநிலையத்துறை சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது.

இதற்கான முயற்சியை எடுக்காத இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக கிராம மக்கள் மனு அறிவித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் அா்ச்சனாபுரத்தில் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் 2 மணி நேரமாகியும் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து, வருவாய்த் துறையினா் அா்ச்சுனாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் கிராமத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் அடுத்த மாதம் 7-ஆ ம் தேதி சமாதானக் கூட்டம் நடத்தி, விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்தாா். இதையடுத்து மாலை 4 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.