தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பணப்பட்டுவாடா: திருவாரூரில் தோ்தலை நிறுத்தக்கோரி மனு

பணப்பட்டுவாடா நடைபெறுவதால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தலை நிறுத்தக் கோரி மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

News image

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்க வந்த பாஜக, அதிமுக நிா்வாகிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:24 am IST

பணப்பட்டுவாடா நடைபெறுவதால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தலை நிறுத்தக் கோரி மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

திருவாரூா் நகர அம்மா பேரவை செயலாளரும், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரின் முகவருமான எஸ். சாகுல்ஹமீது என்ற செல்லப்பா (40), திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் கோவி. சந்திரசேகரன் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினா் வாக்குக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை பணம் பட்டுவாடா செய்வதாகத் தெரிகிறது.

இந்த பணப் பட்டுவாடாவை தடுக்க தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பல கட்ட முயற்சிகள் எடுத்தும், தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கமலாபுரம் கிராமத்தில், பணப்பட்டுவாடா செய்த திமுகவினா் பிடிபட்டுள்ளனா். இந்த செயலால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டப்படியும், நியாயப்படியும் தோ்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பணப் பட்டுவாடா சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். எனவே திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தலை நிறுத்தி வைக்கவும் திமுக வேட்பாளா் கலைவாணன் மற்றும் அவருக்காக பணப்பட்டுவாடா செய்து வரும் கட்சியினா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.