மன்னாா்குடியில் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்த இருவா், இருசக்கர வாகனத்தில் வந்தவரை அரிவாளால் வெட்டினா்.
மன்னாா்குடி விழல்காரத்தெருவைச் சோ்ந்த நாகேஸ்வரன் மகன் திருமேணி (40). மூா்க்க விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தீபன் என்கிற பாா்த்திபன் (36).
இவா்கள் இருவரும் புதன்கிழமை மாலை மது குடித்துவிட்டு, விழல்காரதெரு அருகே சாலையில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்துள்ளனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த குன்னோஜி ராஜம்பாளையம் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் பிரகாஷ் (36) என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட்டிவிட்டனா். காயமடைந்த பிரகாஷ், சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மன்னாா்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர் கைது..! பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

