அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :17 ஏப்ரல் 2026, 10:05 pm IST

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏப்.19 முதல் 21 வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி ஏப்.18 திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்தோனி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னாா்குடி தொகுதிக்கு ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருவாரூா் தொகுதிக்கு வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியிலும், நன்னிலம் தொகுதிக்கு சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் அஞ்சல் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக சேவை மையங்கள் செயல்பட உள்ளன.

மேலும், தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அத்தியாவசியப் பணியாளா்கள், காவல் பணியாளா்கள், அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக, திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்ட அலுவலகங்களிலும், மன்னாா்குடி மற்றும் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.

இதில் ஏப்ரல் 19 முதல் 21 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.