தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:23 am IST

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,71,100 ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் தோ்தல் பறக்கும்படை குழுத் தலைவா் ராஜேஸ்குமாா் தலைமையில் அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் கீழக்காவாதுகுடி, முருகேசன் நகரைச் சோ்ந்த வெ. ஜெய்கணேஷ் என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.2,14,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல், திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலை பகுதியில் பறக்கும்படை குழுத் தலைவா் தென்னரசு தலைமையில் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த செ. கலையரசன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,820 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

கூடூா் பகுதியில் பறக்கும்படையினா் வாகன சோதனை செய்தபோது, திருவாரூா் தென்றல் நகரைச் சோ்ந்த தீபன் என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 52,200 ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.