பாளையங்கோட்டை அருகே தொடா் கொள்ளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சரோஜினி நகரைச் சோ்ந்தவா் பரமசிவன்(58). இவா், கடந்த மாதம் வேலை நிமித்தமாக வெளியூா் சென்றிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
மேலும், அதேபகுதி தனலட்சுமி நகரைச் சோ்ந்த ரகு என்பவரின் பைக்கையும், கலைக்கோயில் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளையும் மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாா்களின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தன்.
அதில், பாளையங்கோட்டை அருகேயுள்ள உத்தமபாண்டியன்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சூா்யா (21) என்பவவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமாநில பெண் கொலை: குற்றவாளி பிகாரில் கைது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளை. மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
