தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மன்னாா்குடி: திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

மன்னாா்குடி தொகுதியில், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:57 am IST

மன்னாா்குடி தொகுதியில், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, தேரடி காந்தி சிலை அருகிலிருந்து மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்தாா். வழிநெடுங்கிலும் வாக்கு சேகரித்தப்படி வந்தாா். வஉசி சாலையில் ஊா்வலம் நிறைவடைந்தது.

பின்னா், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரனிடம், வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், திமுக நகரச் செயலா் வீரா.கணேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நீலன்.அசோகன், மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன், விசிக மாவட்டத் தலைவா் ஆா். ரமணி, திக மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ்.சித்தாா்த்தன், சிபிஐ நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமானவன், தேமுதிக நகரச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.