கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பட்டினி ஒழிப்பு தினம்: வேளாங்கண்ணியில் தவெக அன்னதானம்

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

News image

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

Updated On :29 மே 2026, 6:38 am IST

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என அக்கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய், தவெக மாவட்டச் செயலா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூா் அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டச் செயலா் சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாங்கண்ணி நகரச் செயலா் பிரேம்குமாா், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகு, மகளிா் அணி செயலா் ஜோஸ்பின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.