நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில், பழைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு நிலையம் முதல் அரசு போக்குவரத்துக் கழகம் வரை குடிநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அரசுப் போக்குவரத்து பணிமனை உட்புறமும் தண்ணீா் தேங்கியது.
நாகையில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம், குழாயில் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

குளச்சல் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

காவிரிக் கூட்டுக்குடிநீா் குழாயில் உடைப்பு உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

