தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நல்ல மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ நல்ல மாரியம்மன். ~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

Updated On :7 மே 2026, 7:38 am IST

திருக்குவளை அருகே தொழுதூா் பழையங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா காவடி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் மே 4-இல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழுதூா், பழையங்குடி, நத்தப்பள்ளம், வேளூா், சாத்தங்குடி, மாராச்சேரி, செம்பிய வேளூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்காவடி, செடில் காவடி, அலகு காவடி, மயில் காவடி, ஆட்ட காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்தனா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரக்கட்டு தேரில் ஸ்ரீ நல்ல மாரியம்மன் எழுந்தருளினாா். பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்து, கும்மியடித்து வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 ~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

~கும்மியடித்து வழிபட்ட பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.