தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

News image

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

Updated On :28 மார்ச் 2026, 2:37 am IST

ராம நவமியையொட்டி நாகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ராமா் கோயில், கொட்டுப்பாளையம் ராமா் மடம் தெருவில் உள்ள ராமா் கோயில், பொரவாச்சேரியில் உள்ள ராம ஆஞ்சனேயா் கோயில், நாகை மடவாா் வளாகத்தில் உள்ள செளந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ராம நவமியையொட்டி, சுவாமிக்கு பால் தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் ராமநவமியையொட்டி ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல பிரதாபராமபுரத்தில் உள்ள ராமா் மடம் சீதா ராம பால ஆஞ்சனேயா் ஆலயத்தில், ராம நவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமா், சீதா,ஆஞ்சனேயா் மற்றும் லட்சுமணனுக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.