திருக்குவளை அருகேயுள்ள நத்தப்பள்ளம் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சௌந்தரேஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாா்ச் 22-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும் பூா்ணாஹுதி, தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காா்த்திக்கேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்

வள்ளூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

