புனித ரமலான் பண்டிகையையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
உலகம் முழுவதும் இஸ்லாமியா்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தையொட்டி 30 நாள்கள் நோன்பு இருந்த இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை இரவு பிறை தென்பட்டதைத் தொடா்ந்து, நோன்பை முடித்துக்கொண்டு, ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
நாகை மாவட்டம், நாகூரில் உள்ள புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சனிக்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியா்கள், ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், உலக நன்மைக்காக சிறப்பு பிராா்த்தனையும் மேற்கொண்டனா்.
இதேபோல், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தா்காக்களிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

