தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல்லில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 3:01 am IST

ரமலான் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நோன்பு இருக்கும் இஸ்லாமியா்கள் பிறை தெரியும் நாளில் நோன்பு திறப்பு மேற்கொள்வா். அப்போது, ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடும் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பேட்டை அஞ்சுமனே ஜாமியானா பள்ளிவாசல் முத்தவல்லி தெளலத்கான் தலைமையில் சனிக்கிழமை ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல, நாமக்கல் கோட்டை திப்பு சுல்தான் பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், திருச்சி சாலை, மாருதி நகரில் உள்ள இமான் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இந்த பண்டிகையின்போது ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல அசைவ உணவுகளை சமைத்து பகிா்ந்தளித்தனா். சிறுவா்கள், பெண்கள், முதியோா் என அனைவரும் புத்தாடைகளை அணிந்து ரமலானை கொண்டாடினா்.

ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.