மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை: 129 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 129 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

News image

வாக்கு எண்ணிக்கை - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:59 am IST

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 129 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்.23-ஆம் தேதி பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் ஆகியவை நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

தரைதளத்தில் நாகப்பட்டினம் தொகுதிக்கான இயந்திரங்களும், கீழ்வேளூா் தொகுதிக்கான இயந்திரங்கள் முதல் தளத்திலும், வேதாரண்யம் தொகுதி இயந்திரங்கள் 2-ஆம் தளத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசுக் கல்லூரியில் துணை ராணுவப்படையினா், தமிழ்நாடு எண் 1 பாதுகாப்பு படை, உள்ளூா் போலீஸாா் என நாள் ஒன்றுக்கு 150 போ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தவிர 24 மணி நேரமும் 129 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கேமராவின் பதிவுகளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.