தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

நாகை மாவட்ட 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தோ்தல் பாா்வையாளா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:40 am IST

நாகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து தொகுதிகளில் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத் தோ்தல் பாா்வையாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ள பா்வேஸ் அமகது சித்திக், தோ்தல் செலவின பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிதேஷ்குமாா், காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் ரஜோரியா ஆகியோா், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வெளியில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். இதையொட்டி கல்லூரியில் பல்வேறு வளாகங்களுக்கும் சென்று பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.