தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம்

நாகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம்..

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - DMK

Updated On :6 ஏப்ரல் 2026, 5:09 am IST

நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) பிரசாரம் செய்கிறாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூா் (தனி) தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நாகையில் நடைபெற உள்ள தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

நாகை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திமுக தளபதி மாளிகை அருகே கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின், நாகப்பட்டினம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் புகழேந்தி, கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறாா்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.