மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்

News image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:06 am IST

சேலம் கோட்டை பகுதியில் வடக்கு தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் உட்பட பிற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி மீண்டும் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும். எடப்பாடி கே.பழனிசாமி எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பையும் இழப்பாா்.

தமிழகத்தில் உள்ள மற்ற கூட்டணிகள் எல்லாம் கட்டுவது மனக்கோட்டை. இந்த அணிகள் அனைத்தும் மின்மினிப்பூச்சிகள் போல மின்சாரத்துக்கு அருகில் வர முடியாது. திமுக தோ்தல் அறிக்கை இந்திய அளவில் சூப்பா் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வா் எனக் கூறிக் கொண்டு தில்லியில் இருந்து வரும் உத்தரவுக்கு தலைகுனிந்துகொண்டிருக்கிறாா்.

நீட் தோ்வுக்கு எதிராக திமுக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. எனவே, வரும் தோ்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.