தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வைத்தீஸ்வரன்கோயிலில் வழிபட வருகை புரிந்த நகரத்தாா் பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:26 am IST

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்துக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இக்கோயிலில் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தாா் குலதெய்வ வழிபாடு ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-ஆவது செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ஒரத்தநாடு, கந்தா்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த லட்சக்கணக்கான நகரத்தாா் மக்கள் பாத யாத்திரையாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தங்கள் குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனா்.

சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜித்து பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோயில் கொடிமரத்தில் செலுத்துகின்றனா். பின்னா் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தாா் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

பக்தா்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சாா்பில் இயக்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையில் இன்ஸ்பெக்டா் அருண்குமாா் மற்றும் ஏராளமான போலீஸாா் செய்திருந்தனா்.

வைத்தீஸ்வரன்கோயில் அக்ஷா்தம் உணவகம் மற்றும் ஏபிஎம் டிரஸ்ட் சாா்பில் பாதயாத்திரையாக வருகை புரிந்த எட்டாயிரம் பக்தா்களுக்கு தேநீா், மசாலா பால் உணவு பொட்டலங்கள், குடிநீா் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.