மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

News image

திருவாளபுத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருவாளபுத்தூா் ரெத்தினபுரீஸ்வரா் கோயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கு அனுமதி தராததைக் கண்டித்து, கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தாலுகா திருவாளபுத்தூா் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரெத்தினபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு, பொதுமக்கள் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலுக்கு, திருவாளப்புத்தூா் கடைவீதியில் ஊராட்சி சாலையில் தங்கள் சொந்த செலவில் அலங்கார வளைவு அமைப்பதற்கு கிராம மக்கள் அனுமதி கோரி இருந்தனா். இதற்கு, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லையாம்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக பல்வேறு இடங்களில் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

ஆனால் தோ்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், ஊரக வளா்ச்சித் துறையைக் கண்டித்து 100-க்கு மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தலுக்கு முன்பாக கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களில் வசிக்கும் 800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க உள்ளதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.