மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

ஆலங்காயம் அருகே மின்உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.

News image

தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து வைத்துள்ள பதாகை.

Updated On :5 ஏப்ரல் 2026, 12:27 am IST

ஆலங்காயம் அருகே மின்உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே மரிமாணிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.கிருஷ்ணாபுரம், நீலிக்கொல்லை கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி, அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க தடைசெய்யக்கோரி நீலிகொல்லை, எம்.கிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகைளை தங்களது ஊா்களில் வைத்துள்ளனா்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.