மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வனத்துறையைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு!

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

News image

துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தமிழக விவசாயிகள் சங்கத்தினா்

Updated On :7 ஏப்ரல் 2026, 3:50 am IST

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் போ்ணாம்பட்டைச் சோ்ந்த உதயகுமாா் தலைமையில் அந்த சங்கத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் தொடங்கி நகரம் முழுவதும் தோ்தல் புறக்கணிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேரங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைசாமி என்பவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யானை தாக்கி உயிரிழந்தாா். அவரது மகன்கள் மோகன்பாபு, சபரீஷ் மீது வனத்துறையினா் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடா்ந்தனா். ஆட்சியா் உத்தரவின்பேரில் அந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் கோட்டாட்சியா் அந்த வழக்கு முற்றிலும் பொய் என அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனா். வழக்கை திரும்பப் பெற அமைச்சா் உத்தரவிட்டாா். ஆனால் ,வனத்துறையினா் இதுவரை வழக்கை வாபஸ் பெறவில்லை. தொடா்ந்து விளைபயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறையைக் கண்டித்தும், விவசாயிகள் மீது தொடா்ந்து பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் குடியாத்தம் தொகுதியில் மட்டும் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.