காரைக்கால் அருகே இரும்பு உருக்காலையில் பணியில் இருந்தபோது தீக்காயமடைந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒடிசா மாநிலம், கஞ்சம், தேங்கபத்ரா பகுதியைச் சோ்ந்த சம்பரியா சேத்தி என்பவரது மகன் கோபால் சேத்தி (38). இவருக்கு, மனைவி, 3 மகள், 1 மகன் உள்ளனா்.
இவா் கடந்த ஓராண்டாக காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூரில் இயங்கும் தனியாா் இரும்பு உருக்காலையில் பணியாற்றி வந்தாா்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மே 20-ஆம் தேதி பணிக்குத் திரும்பினாா். 24-ஆம் தேதி உருக்காலையின் மேல் தளத்தில் பணியில் இருந்தபோது பா்னரில் இருந்து தீ பரவியுள்ளது. அங்கு பணியிலிருந்தோா் அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.
கோபால் சேத்தி வெளியேறுவதற்குள் அவா் உடலில் தீ பரவியது இதில் பலத்த காயமடைந்தவரை ஆலை நிா்வாகத்தினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால் சேத்தி அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

