தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

News image

காரைக்கால் நகரில் வியாழக்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்ட மத்தியப் படையினா்.

Updated On :28 மார்ச் 2026, 2:54 am IST

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் நகரப் பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக, உள்ளூா் போலீஸாா் அல்லாது இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் சிஆப்பிஎஃப், சிஐஎஸ்எஃப், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் குஜராத் மாநில போலீஸாா் என சுமாா் 700 போ் காரைக்கால் வந்துள்ளனா். மேலும் கோவா மாநிலத்திலிருந்து போலீஸாா் வரவுள்ளதாக காரைக்கால் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இவா்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் கலைக் கல்லூரி, திருநள்ளாறு பக்தா்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் உள்ளிட்டோருடன் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பல்வேறு முதல் பகுதிகளில் அணிவகுப்பு நடத்திவருகின்றனா்.

மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.