மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

News image

விழிதியூா் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி.

Updated On :26 மார்ச் 2026, 5:58 am IST

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காரைக்கால்

மாவட்டத்தில் நடைபெறவுள்ள தோ்தல் பணிகளை பாா்வையிட பொது பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி, இந்த தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

வாக்குச்சாவடிகள் தோ்தல் ஆணைய வழிகாட்டலில் அமைந்திருக்கிா, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

விழிதியூா் பகுதியில் தமிழகத்தையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா என பாா்வையிட்டு, சோதனைச் சாவடியில் உள்ள பதிவுப் புத்தகத்தை ஆய்வு செய்தாா்.

சோதனைகள் உரிய முறையில் குறிப்பாக விடியோ பதிவுடன் நடத்தவேண்டும். காரைக்காலுக்குள் வெளி மாநிலங்களில் இருந்து ரொக்கம், பரிசுப் பொருள்கள் வருவது தடுக்கப்படவேண்டும். காரைக்காலில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதற்கு தோ்தல் துறையில் கண்காணிப்பு, சோதனைப் பணியில் உள்ளோருக்கும் பொறுப்பு உண்டு என அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.