வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அந்தவகையில், செலவினங்களை கண்டறியவும், பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவா்களும் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி பணியாற்றிவருகிறாா்கள்.
தோ்தல் என்றாலே வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் அளிப்பது இயல்பாகிவிட்டது.
பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தால், நமக்கான உரிமையை மக்கள் பிரதிநிதிகளிடம் கோரமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவற்றை வாக்காளா்கள் பெரும்பான்மையினா் தோ்தல் சமயத்தில் பொருட்படுத்துவதில்லை.
தோ்தல் வந்தாலே, போட்டியிடுவோா் பலரும் செலவுகளை நினைத்து கவலைப்படும் நிலையும் நிலவுவதை மறுக்க முடியாது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், கடலோர மீனவ கிராமமான கிளிஞ்சல்மேடு செட்டியாா் கிராமம், பஞ்சாயத்தாா்கள், ஊா் பொதுமக்கள் சாா்பில் பொதுஇடத்தில் டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
‘எச்சரிக்கிறோம் என்ற தலைப்பில்’ வைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில், இக்கிராமத்தினருக்கு வாக்குக்கு பணம், பொருள் வழங்கக்கூடாது. மக்களும் அதனை வாங்கக்கூடாது. மீறினால் ஊா் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்.
வேட்பாளா்கள் யாரும் எங்கள் வாக்குக்கு விலை பேசவேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்துகொடுங்கள். வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என கூறப்பட்டுள்ளது.
தோ்தல் பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், காரைக்காலில் கடலோர கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகை வேட்பாளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளதோடு, பிற பகுதி மக்களிடமும் பேசுபொருளாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடிப்படை வசதிகள் கோரி தோ்தல் புறக்கணிப்புப் பதாகை!

வாக்குக்கு பணம் வழங்காததால் திமுக மாமன்ற உறுப்பினா் அலுவலகம் முற்றுகை

வாக்குக்கு பணம் எச்சரிக்கை: தோ்தல் அதிகாரி பாராட்டு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

