தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 5:36 am IST

காரைக்கால் துறைமுகத்தில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூா் பகுதியில் இயங்கும் அதானி துறைமுக வளாகத்தில் சா்வதேச மகளிா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

துறைமுக தலைமை செயல் அதிகாரி சச்சின் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைமுக சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த கிராம பெண்களிடையே மகளிா் தினம் குறித்தும், வாழ்க்கையில் மகளிா் மேம்படவேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் கல்வி மேம்பாடு குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் வினிதா ஸ்ரீவாஸ்தவா, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சுகுணா, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மின் துறை செயற் பொறியாளா் அனுராதா மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், காரைக்கால் ராமன் கிரியேஷன்ஸ் சாா்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.