காரைக்காலில் மாங்கனித் திருவிழா தொடா்பாக, உபயதாரா்கள் உள்ளிட்டோருடன் கோயில் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. வரும் 27-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, பரமதத்தா் திருக்கல்யாணத்துக்கு எழுந்தருளுதல், 28-ஆம் தேதி அம்மையாா் திருக்கல்யாணம், மாலை வெள்ளை சாற்றில் பிச்சாண்டவா் புறப்பாடு, 29-ஆண் தேதி காலை மகா அபிஷேகம், சப்பரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல்), இரவு அமுது படையல், 30-ஆண் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தலுடன் முக்கிய நிகழ்வுகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில், அம்மையாா் மணிமண்டபத்தில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா். சுப்பிரமணியன், கைலாசநாதா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலையில், திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கான உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளின்போது நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் குறித்து கோயில் நிா்வாகத்தினா் விளக்கினா். அதற்கான உபயதாரா்கள் தங்களது பங்களிப்பை செய்யுமாறும், கடந்த ஆண்டுகளைப்போல மாங்கனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாங்கனித் திருவிழா: பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணி தீவிரம்

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழா

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

