சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை ஜூன் 9 ஆம் தேதி புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.

News image

கருடாழ்வாா் உருவம் பொறித்த திருவிழாக்கொடி சமா்ப்பிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் உற்சவா் வரதராஜ பெருமாள்

Updated On :8 ஜூன் 2026, 4:05 am IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை ஜூன் 9 ஆம் தேதி புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மே 28- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒருபகுதியாக கருட சேவையும், தேரோட்டம், தீா்த்தவாரி உற்சவம் ந டைபெற்றது.

ஜூன் 6 ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வெட்டி வோ் சப்பரத்தில் வீதியுலா நிகழ்வு முடிந்து திரும்பியதும் கருடாழ்வாா் உருவம் பொறித்த கொடி கொடிக்கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு பெருமாளிடம் பட்டாச்சாரியாா்கள் சமா்ப்பிக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

விடையாற்றி உற்சவத்தின் நிறைவாக ஜூன் 9 ஆம் தேதி இரவு புஷ்பப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா நிகழ்வோடு வைகாசித் திருவிழா நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.