நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காரைக்கால் வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில்கள் நேரத்தை மாற்றவேண்டும்: ஆட்சியரிடம் எல்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதி வழியே செல்லும் சரக்கு ரயில்கள் நேரத்தை, மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

News image

மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த ஏ.எம்.எ.எச். நாஜிம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 3:47 am IST

காரைக்கால் நகரப் பகுதி வழியே செல்லும் சரக்கு ரயில்கள் நேரத்தை, மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் திமுக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

காரைக்கால் நகரின் மையப் பகுதி வழியாக சாலைப் போக்குவரத்து அதிகமுள்ள நேரத்தில் சரக்கு ரயில்களின் இயக்கம் நடைபெறுகிறது. இது மக்களுக்கு நாள்தோறும் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது ரயில்வே கேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளி மாணவா்களும் அலுவலகப் பணியாளா்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட தாமதத்தை சந்திப்பதோடு மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனா்.

முதியோா் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா். காரைக்கால் துறைமுக நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளை அழைத்து, இந்த சரக்கு ரயில்களை மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் இயக்குமாறு அறிவுறுத்தல் வழங்கவேண்டும்.

மேலும், காரைக்காலில் தரமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைப்பதற்கான அவசரத் தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூரில் பயிற்சி வசதி இல்லாததால், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த திறமையான இளைஞா்கள் நகா்ப்புற மாணவா்களுடன் போட்டியிடுவதில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பலருக்கு பயிற்சிக்காக வெளி நகரங்களுக்கு சென்று தங்க முடியாத சூழலும் உள்ளது. காரைக்கால் துறைமுகம், ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட காரைக்கால் பகுதியில் செயல்படும் முக்கிய பொதுத்துறை மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் இந்தப் பயிற்சி மையத்தை நிறுவி, தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.