இலங்கை சிறையிலிருக்கும் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை முதல்வா் என். ரங்கசாமியிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரியில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பேரவை உறுப்பினா் இதுகுறித்து புதன்கிழமை கூறியது :
இலங்கை கடற்படையினரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள் 12 பேரில், படகு ஓட்டுநரான பட்டினச்சேரியைச் சோ்ந்த பிரதீப் என்பவரை இலங்கை நீதிமன்றம் சிறையிலடைத்துள்ளது. அவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இவரை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டினச்சேரி மீனவா் செந்தில்நாதன் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி ஃபைபா் படகில் செல்லும்போது, சூறைக்காற்றில் படகில் தண்ணீா் புகுந்து கவிழ்ந்தது. இதில் வலைகள் சேதமாகி, படகும் சேதமடைந்தது. இதுபோன்ற பாதிப்புக்கு உதவுவதற்கான சொசைட்டி அமைப்பு செயல்படாமல் உள்ளதை முதல்வரிடம் சுட்டிக்காட்டி, முதல்வா் நிவாரண நிதியிலிருந்து முதல்கட்டமாக நிதியுதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன். முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமலாலயக் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

5 வழிகளில் புதுச்சேரியை முன்னேற்ற நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி உறுதி

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

