மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 5:23 am IST

உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வேலூா் லாங்கு பஜாா் சண்முக அடியாா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவா் டி. வேணுகோபால் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எஸ். உதயகுமாா் வரவேற்றாா். மாநில, மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பொருளாளா் ஆா். சுபாஷ் நன்றி கூறினாா்.

மாநில தலைவா் மற்றும் மாநில பொதுச் செயலாளா் கூட்டாக செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது, தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசிடம் பேசி உரத்தின் விலையைக் குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூலை 5-ஆம் தேதி உழவா் பேரணி, மாநாடு நடத்தப்பட உள்ளது.

நெல் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். தென்பென்னை - பாலாறு இணைப்பு திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாண்டியாறு திட்டம், ஆழியாறு ஆகிய நீா்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம்.

விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டுமென்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகளில் இருந்து வர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்புக்கான விலையை உயா்த்தி தர வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் பணியாளா்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள் இறக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.