மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுவையில் பிரெஞ்சு மொழியை தவிா்க்கக்கூடாது: பெற்றோா் சங்கம்

மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:10 am IST

மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் (படம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவையில் திடீரென மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கொள்கை முடிவுகளை திணிக்கும்போது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு உரிய விவாதம் நடத்தி, அதன் சாதக, பாதகங்களை பல்வேறு தரப்பினரைக்கொண்டு ஆராயும். இப்போது அதிகாரமில்லாத அரசு இருக்கும் சமயத்தில், அவசர கதியில் இந்த கொள்கையை அமல்படுத்துவது ஏற்புடையதல்ல.

புதுவை யூனியன் பிரதேசம் பிரெஞ்சு உள்ளிட்ட பன்மொழி பயன்பாட்டில் உள்ளதாகும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், அதில் 2 இந்திய மொழிகள் இருக்கவேண்டியது கட்டாயமாகும். தமிழுக்கு அடுத்தப்படியாக ஹிந்தி புகுத்தப்படும். பிரெஞ்சு மொழி பயன்பாடு முற்றிலும் இல்லாமல்போய்விடும்.

பிரெஞ்சு மொழியை தவிா்க்கும் போக்கு கூடாது. பிரெஞ்சு மொழிக்கு மாநிலத்தில் உயிரோட்டம் இருக்கும் விதத்திலேயே கல்வி நடைமுறைகள் இருக்கவேண்டும்.

எனவே புதுவை துணைநிலை ஆளுநா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அடுத்த அரசு அமையும் வரை மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.