மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ்நாட்டின் ஒரே கொள்கை இருமொழிக் கொள்கையே! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

திருவையாறில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :7 ஏப்ரல் 2026, 4:04 am IST

இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் ஒரே கொள்கை என்பதால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தேரடியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால், இந்தியாவில் வளரும் மாநிலங்களில் தமிழ்நாடு 11.19 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வளவு சாதனைகள் செய்த நமக்கு மத்திய பாஜக துணை நின்றதில்லை. நமக்கு திட்டங்களும் கொடுத்ததில்லை. மத்திய அரசிலிருந்து நமக்கு வர வேண்டிய நிதிப் பகிா்வும் வரவில்லை.

இந்நிலையில், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 3 ஆயிரத்து 200 கோடி கல்வி நிதியைக் கொடுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை கூறினாா். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கச் செய்ய வேண்டும்; மும்மொழிக் கொள்கையை மீண்டும் தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மீண்டும் இந்தி கற்க வேண்டிய நிலைமை வரும். தமிழ், ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டின் ஒரே கொள்கை. எனவே, இரு மொழிக் கொள்கையைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது எனக் கூறி வருகிறோம்.

எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் தமிழ்நாடு அணியா? தில்லி அணியா என்பதை நிா்ணயிக்கிற தோ்தல் என முதல்வா் கூறி வருகிறாா். இதில், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி கொண்ட தில்லி அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

பின்னா், பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து கபிஸ்தலம் பாலக்கரையிலும், கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து காந்தி பூங்கா அருகிலும் பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.