காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய 152-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் பழைமையான செபஸ்தியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆலயத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு வரப்பட்டு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா். இணை பங்குகுரு சாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை ஆலய ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், 18-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனித சூசையப்பா் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

