மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

News image

கோயிலில் இருந்து புனிதம் செய்து கொண்டு வரப்பட்ட கொடி. உடன் காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி.பால்ராஜ்குமாா் உள்ளிட்டோா்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:03 am IST

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய 152-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் பழைமையான செபஸ்தியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆலயத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு வரப்பட்டு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா். இணை பங்குகுரு சாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை ஆலய ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், 18-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.