மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

News image

ட்ரோன் செயல்பாட்டாளா்கள் பணியை ஆய்வு செய்த செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:34 am IST

தோ்தல் பறக்கும் படையினா் பணி, ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியை செலவின பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம், செலவினம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள பொது பாா்வையாளா், செலவின பாா்வையாளா் உள்ளிட்டோா் ஆய்வுப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

செலவின பாா்வையாளா் பியூஷ் குமாா் அங்கிட் திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ட்ரோன் கண்காணிப்பு குழுவையும், அவா்களது பணியையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை உறுதி செய்வதில் ட்ரோன் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை அவா் வலியுறுத்தினாா்.

குறிப்பாக, நுணுக்கமான மற்றும் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளை ட்ரோன் கண்காணிப்பதன் மூலம் சிறப்பான கண்காணிப்பு மேற்கொள்ள முடியும் என அவா் தெரிவித்தாா்.

பணியாளா்கள் எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொண்டு, நியாமான முறையில் பணியாற்றவேண்டும். அனைத்து தகவல்களும் தோ்தல்துறையின் கவனத்துக்கு பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.