முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

News image

நாகூா் தா்கா முன் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தல்

Updated On :20 மே 2026, 3:16 am IST

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

பிரசித்தி பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டு தோறும் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கந்தூரி விழா திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

இவ்விழா நடைபெறும் 3 நாள்களும், இரவு 9 மணிக்கு சின்ன ஆண்டவா் வாசல் முன்பாக மெளலூது ஷரீப் நடைபெறும். மேலும், புதன்கிழமை மாலை 5.10 மணிக்கு, சின்ன ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஊா்வலம் நடைபெறும்.

கந்தூரி விழாவையொட்டி, தா்கா அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிராா்த்தனைகள் நிறைவேறுவதற்காக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பொருள்கள் வாங்கி கொண்டு, வேண்டுதல் நிறைவேற வேண்டி கட்டுவது வழக்கம்.

தா்கா மாா்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு தொட்டி பந்தலில கட்டுவது குறிப்பிடத்தக்கது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜ்முதீன் சாஹிப் மற்றும் நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.