கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ- மாணவியா்.

Updated On :11 மே 2026, 12:07 am IST

நாகை சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

நாகையில் 4-ஆவது ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று வரும் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களை கௌரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஆா். ஸ்ரீமதி, 567 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் எஸ். அஸ்வின் மற்றும் 565 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் எஸ். தா்ஷிணி, எஸ். அனுஷா ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனா்.

மேலும், பத்தாம் வகுப்பில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்து சோ்ந்து, சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவியரும் பாராட்டப்பட்டனா்.

மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, அனைத்து மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்களின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனா்.

சிறப்பான தோ்ச்சி மற்றும் உயா்ந்த மதிப்பெண்களுக்கு காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வா், ஆலோசகா், இயக்குநா் மற்றும் தாளாளா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டி சிறப்புரையாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.