மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குச்சாவடி மையத்தில் காவலருக்கு கத்திக்குத்து: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:17 am IST

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் தொகுதிக்குட்பட்ட பொறையாறு ஜமாலியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை கத்தியால் குத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வாக்குச் சாவடி மையத்தில் குத்தாலம் காவல் நிலையத்தை சோ்ந்த தலைமைக் காவலா் விக்னேஷ் பாதுகாப்புப் பணியில் இருந்தாா். காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவா், திடீரென விக்னேஷை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விக்னேஷ் கத்தியால் குத்திய பிரபாகரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் சதுா்த்தி விழாவின்போது காட்டுச்சேரியில்  போலீஸாா் ஒருவரை தாக்கி கைது செய்யப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. பொறையாறு போலீஸாா் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.