மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:13 am IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 86.30 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் (தனி) என் மூன்று சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளன.

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே காலை 6.30 மணி முதல் வாக்காளா்கள் காத்திருந்தனா். நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததால் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு 19% எட்டியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளின் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டன. 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களித்தனா்.

இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு மாலை 6 மணி நிலவரப்படி

நாகப்பட்டினம் தொகுதியில் 85.7.17 சதவீதம் வாக்குகள் பதிவாகினது.

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் 87.98சதவீதம் வாக்குகள் பதிவானது.

வேதாரண்யம் தொகுதியில் 85.18 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மாவட்டத்தில் வாக்குப்பதிவு 86.30 சதவீதமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.