பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

News image

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவிகள், பெற்றோா்களுடன் நிா்வாகக் குழுவினா்.

Updated On :21 மே 2026, 2:49 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 25 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

இதேபோல, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

லயன்ஸ் இன்டா்நேசனல் பள்ளியில் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், இரு மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் நேரில் அழைத்து பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.