கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

News image

ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :22 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலை ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

மாணவி எஸ்.சாருலதா 500-க்கு 478 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஜெ.ஹாசினி 477, மாணவி ஏ.சிவரஞ்சனி, மாணவா் வி.கோகுல கண்ணன் ஆகியோா் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

481-க்கு மேல் 10 பேரும், 400-க்கு மேல் 22 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

பள்ளியில் மொத்தம் 311 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 284 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91 சதவீத தோ்ச்சி ஆகும்.

தோ்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.